ரேடியோ சிட்டியின் "தெரிந்த கோவை தெரியாத விஷயம்" ஆடியோ புக் வெளியீட்டு விழா


கோவை: ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலைக் கல்லூரியில் ரேடியோ சிட்டியின் "தெரிந்த கோவை தெரியாத விஷயம்" ஆடியோ புக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவை பற்றிய பல்வேறு வரலாற்று தகவல்கள் கூறும் வகையில் இருந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தினமலர் மூத்த பத்திரிக்கையாளர் செல்வகுமார் கலந்து கொண்டார். 



நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கோவை நகரம் வரலாற்றை கூறும் சிறப்பு நகரமாகவும், கோவை நகரை பற்றி இந்த ஆடியோ புக் வெளியிடுவது பெருமைக்குரிய ஒன்றாகும். என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், 22 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தேன். மேற்கு தொடர்ச்சி மலை, ஆறுகள் போன்ற இயற்கை வளங்கள் என்னை கவர்ந்தது. இயற்கை வளங்களை பற்றி கட்டுரை எழுத தொடங்கினேன். கோவை நகரில் உள்ள தன்னார்வ அமைப்புகள் மூலமாக கவுசிகா நதியின் தொடர்கதை எழுத தொடங்கினேன். குருடிமலையில் தொடங்கும் இந்நதி நொய்யல் ஆற்றின் துணை நதியாகும். இதனை தெரிந்து கொண்டு எனது தொடர்கதையின் மூலம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி நாகராஜ் பாராளுமன்றத்தில் பேசினார். இதுவே எனக்கு கிடைத்த வெற்றி என்றார். 



மேலும், இதுபோன்ற நாம் அறியாமல் இருக்கும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய தேடல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கவும், அடுத்த சந்ததியினருக்கு இதனை கொண்டு சேர்க்கவும் பாடுபட வேண்டும் எனக் கூறினார்.



பின்னர், விழாவில் "தெரிந்த கோவை தெரியாத விஷயம்" ஆடியோ புத்தக தகடினை ரேடியோ சிட்டி சார்பில் வெளியிட, அதனை தினமலர் மூத்த பத்திரிக்கையாளர் செல்வகுமார் பெற்றுக் கொண்டார். அதன்பின், ரேடியோ சிட்டியின் 'பிளானட்ரேடியோ.காம்' என்ற இணைய தளத்தினை ரத்தினம் கல்லூரியின் தலைவர் மதன் துவக்கி வைத்தார்.





இந்நிகழ்ச்சியில், பழங்கால ரேடியோவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. மாணவர்கள் இதனை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில், வரலாற்று ஆராய்ச்சியாளர் இளங்கோவன், ரத்தினம் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி மாணிக்கம், வரலாற்று ஆய்வாளர் ராஜேஷ் கோவிந்தராஜ், தன்னார்வ அமைப்புகள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...